அன்பான நண்பர்களே,
நான் உங்களுடன் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் மாகிழிச்சி அடைகிறேன்.
காவேரி பிரச்சனை என்பது இரு மாநில வாழ்வாதார சம்பந்தபட்ட பிரச்னை இதில் அரசியலோ அல்லது உணர்ச்சி வசப்படுவதோ தவறானது.
நாம் முதலில் நமது நீர் ஆதாரத்தை சரியாக பயன் படுத்துகிறோமா என்பதை பார்க்க வேண்டும் அதுமட்டும் அல்லாமல் வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு சேமிப்பு திட்டங்களை செய்யதிருக்கிறோமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
ஒரு வீடு என்று எடுத்துக் கொண்டாலே வருங்கால தேவைக்கு நீர்மேலாண்மை தொட்டி வைக்கின்றோம் அப்படி இருக்க பல யாக்கர் நிலங்களில் விவசாயம் செய்ய எத்தனை நீர் சேமிப்பு திட்டம் தேவைப்படுகிறது என்பதை யோசித்து பார்க்க வேண்டும் அதையெல்லாம் நாம் செய்து முடித்த்திருக்கின்றோமா என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அப்படிஎன்றால் நாம் என்ன செய்திருக்க வேண்டும்? நான் சில தலைவர்களின் உரையாடலை கேட்டபோது பெருன்பான்மையன நீர் கடலில் கலக்கிறது என்று கூறுகிறார்கள் அதை சேமித்து வைக்க திட்டங்களை தீட்ட வேண்டாமா?
நீங்கள் கேள்வி எழுப்பலாம் இதற்க்கெல்லாம் பணம் வேண்டாமா என்று தமிழன் நினைத்தாள் செய்ய முடியாதது எதேனும் உள்ளதா என்று சூளுரைக்கும் துடிப்பும் துணிவும் கொண்ட இளைஞர்களை பயன்படுதிதினாலே நாம் இதை எளிமையாக சாதித்து விடமுடியும்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு வரலாறு சிறப்புமிக்க கோவில்கள் மற்றும் கோட்டைகளை தொழில் நுட்பம் இல்லாத காலத்திலேயே உருவாக்கிய தமிழனால் நீர் சேமிப்பு திட்டங்கள் மாற்றும் நீர் மேலாண்மை திட்டங்களை உருவாக்க முடியாதா?
அரசு முதலில் தனது முழுகவனத்தையும் போர்க்கள அடிப்படையில் இத்திட்டங்களுக்காகா செலவிடவேண்டும்.
ஒவ்வொரு விவாயிம் எதற்க்காக உழைக்கின்றான் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு அதை மனதில் கொண்டு அரசு செயல்படுமானால் வெற்றி பெறலாம்.
குறிப்பு :-
மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் அனைத்தும் என்னுடை தனிப்பட்ட கருத்துக்கள் இது யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கு இல்லை.
உங்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால் உங்கள் கருத்துக்களை தெரியபடுத்தலாம்.